நீலகிரி பந்திப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி பெண் யானை உயிரிழப்பு

நீலகிரி அடுத்த பந்திப்பூர் அருகே கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு மைசூர் நோக்கி சென்ற லாரி மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தின் வழியாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை இணைக்க கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கேரளா, கர்நாடகா செல்லும் கனரக வாகனங்கள் கக்கநல்லா மற்றும் முத்தங்கா சாலைகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன.



இந்நிலையில் நேற்று இரவு கேரளாவில் இருந்து முத்தங்கா வழியாக மைசூர் நோக்கிச் சென்ற கோவை பதிவு எண் கொண்ட லாரி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் அருகே சாலையை கடக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெண் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பந்திப்பூர் வனத்துறையினர் லாரியை பிடித்து வைத்துள்ளதுடன் யானையை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் லாரி மோதி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...