திருப்பூரில் பணம் கேட்டு டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய வழக்கு - 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு

திருப்பூர் பலவஞ்சிபாளையம் டாஸ்மாக் பார் ஊழியர் கார்த்திகேயனை பணம் கேட்டு மிரட்டி மதுபாட்டிலால் தாக்கிய செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு.



திருப்பூர்: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(25). இவர் திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இரவு செட்டிபாளையம் அருகே நடந்து சென்ற போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த மகாராஜா(25) மற்றும் பிரவீன்குமார்(20) ஆகியோர் இவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

அப்போது கார்த்திகேயன் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த மகாராஜா மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து கார்த்திகேயனை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.



இதுகுறித்து நல்லூர் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மகாராஜா மற்றும் பிரவீன்குமார் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இது தொடர்பான வழக்கு திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் கொலை முயற்சி குற்றத்திற்காக மகாராஜா, பிரவீன் குமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், 1000 ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி செல்லதுரை தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பஷீர் அகமது ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...