திருப்பூரில் பணம் கேட்டு டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய வழக்கு - 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு

திருப்பூர் பலவஞ்சிபாளையம் டாஸ்மாக் பார் ஊழியர் கார்த்திகேயனை பணம் கேட்டு மிரட்டி மதுபாட்டிலால் தாக்கிய செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு.



திருப்பூர்: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(25). இவர் திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இரவு செட்டிபாளையம் அருகே நடந்து சென்ற போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த மகாராஜா(25) மற்றும் பிரவீன்குமார்(20) ஆகியோர் இவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

அப்போது கார்த்திகேயன் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த மகாராஜா மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து கார்த்திகேயனை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.



இதுகுறித்து நல்லூர் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மகாராஜா மற்றும் பிரவீன்குமார் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இது தொடர்பான வழக்கு திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் கொலை முயற்சி குற்றத்திற்காக மகாராஜா, பிரவீன் குமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், 1000 ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி செல்லதுரை தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பஷீர் அகமது ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...