பல்லடத்தில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின் போது காங்கிரஸ் - போலீசார் இடையே வாக்குவாதம்..!

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். அப்போது பட்டாசு வெடிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர், போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


திருப்பூர்: கடந்த மாதம் இமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடந்திருந்தது. இன்று பதிவான ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை தட்டிப் பறித்தது.

காங்கிரசின் இந்த வெற்றியை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் பல்லடம் பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கும், பஸ் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



பின்னர், சிறிது நேரம் கழித்து காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

அதே இடத்தில், பா.ஜ.க வினரும் குஜராத்தில் பா. ஜனதா வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினர். வெவ்வேறு துருவங்களாக உள்ள காங்கிரஸ், பா. ஜனதா கட்சியினர் ஒரே இடத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...