இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். அப்போது பட்டாசு வெடிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர், போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பூர்: கடந்த மாதம் இமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடந்திருந்தது. இன்று பதிவான ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை தட்டிப் பறித்தது.
காங்கிரசின் இந்த வெற்றியை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் பல்லடம் பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கும், பஸ் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், சிறிது நேரம் கழித்து காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.
அதே இடத்தில், பா.ஜ.க வினரும் குஜராத்தில் பா. ஜனதா வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினர். வெவ்வேறு துருவங்களாக உள்ள காங்கிரஸ், பா. ஜனதா கட்சியினர் ஒரே இடத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரசின் இந்த வெற்றியை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் பல்லடம் பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கும், பஸ் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், சிறிது நேரம் கழித்து காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.
அதே இடத்தில், பா.ஜ.க வினரும் குஜராத்தில் பா. ஜனதா வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினர். வெவ்வேறு துருவங்களாக உள்ள காங்கிரஸ், பா. ஜனதா கட்சியினர் ஒரே இடத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.