கூடலூரில் 18 நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வரும் PM2 மக்னா யானை - மேலும் ஒரு வீட்டை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு..!

கூடலூரில் மூதாட்டி ஒருவரை தாக்கி கொலை செய்த PM2 மக்னா யானையை பிடிக்க வனத்துறை 18 நாட்களாக முயற்சி செய்து வரும் நிலையில், இன்று அதிகாலை மேலும் ஒரு வீட்டை இடித்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, புளியம்பரை, வாழவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றித்திரியும் PM2 மக்னா யானை இதுவரை 50 க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அரிசி போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது.

இதனிடையே கடந்த மாதம் பாப்பாத்தி என்ற மூதாட்டியை அடித்துக் கொன்ற இந்த யானையை பிடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கடந்த 18 நாட்களாக வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், 4 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் PM2 மக்னா யானை சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.



இதனிடையே நேற்று அதிகாலை இரண்டு வீடுகள் சேதப்படுத்திய PM2 மக்னா யானை, இன்று காலை தேவாலா அருகே கரிய சோலை பகுதியில் உள்ள டேன் டீ குடியிருப்பில் நம்பர் 3 ரேஞ்ச் பகுதியில் புகுந்து காளிதாஸ் என்பவர் வீட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.



வீட்டை உடைத்து உள்ளே சென்ற யானை வீட்டிற்குள் இருந்த அரிசியை சாப்பிட்டு அட்டகாசம் செய்துள்ளது. அப்போது வீட்டிற்குள் படுத்திருந்த காளிதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

18 நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வரும் PM2 மக்னா யானை மேலும் ஒரு வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...