கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிராக மாநகராட்சி ஊழியர்கள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் உடலில் பிளாஸ்டிக் பைகளை கட்டிக்கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு எதிராக நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், மாநகராட்சி ஊழியர்கள் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு, பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு எதிராக நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவும் தமிழக அரசு தடை செய்துள்ளது.



அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி பணியாளர்கள் உடல் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அரசு எடுக்கும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



அதேபோல் தமிழக அரசின் பிரச்சாரமான ”மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...