சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பறிமுதல் - 4 பேர் கைது

தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் குட்கா பொருட்கள் கண்டுபிடிப்பட்டது.

இதையடுத்து வெளி மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுதாகரன் (43), குருநாதன் எத்திராஜ் (50), செல்வகுமார் (47), சிவக்குமார் (38) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...