தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோவையில் மாவட்ட அளவிலான 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.


கோவை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்டக் குழு, கற்பகம் உயர்கல்வி கழகத்துடன் இணைந்து கோவையில் மாவட்ட அளவிலான 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தியது.



கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டின் துவக்க விழாவில் கற்பகம் உயர்கல்வி கழகத்தின் துணை வேந்தர் முனைவர் ப. வெங்கடாசலபதி தலைமையில், பதிவாளர் முனைவர் ம. பழனிச்சாமி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

முன்னதாக மாநாட்டிற்கு வந்தவர்களை உயர்கல்வி கழகத்தின் மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி வரவேற்றார்.

இந்த மாநாட்டில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர். பூபதி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் எம்.எஸ். முகமது பாதுசா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரிஷி. சரவணனின் நன்றி உரையுடன் துவக்கவிழா நிறைவு பெற்றது.



இந்த மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

இம்மாநாட்டில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 40க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 87 அறிவியல் ஆய்வு கட்டுரைகள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

அடுத்து மாநில அளவில் பங்கேற்க உள்ள ஆய்வுகளை தேர்வு செய்ய கற்பகம் உயர் கல்வி கழகத்தின் பேராசியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் என 25 பேர் மதிப்பீட்டாளர்களாக பணியாற்றினர்.

மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட அக்கட்டுரைகளிலிருந்து 10 கட்டுரைகள் எதிர்வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற உள்ள மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவற்றில் 2 ஒன்றிய நடுநிலை பள்ளிகள், 3 அரசு மேல் நிலை பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி, மற்றும் 4 தனியார் பள்ளி மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளாகும்.

இம்மாநாட்டினை கோவை மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கோவை கற்பகம் உயர்கல்வி கழகத்தின் பேராசிரியருமான சிவசெந்தில் எற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...