வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வடக்கு மாவட்டம் சார்பில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வடக்கு மாவட்டம் சார்பில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமை வகித்தார்.



ஆர்பாட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர் அகமது கபீர் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...