வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வடக்கு மாவட்டம் சார்பில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வடக்கு மாவட்டம் சார்பில் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமை வகித்தார்.



ஆர்பாட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர் அகமது கபீர் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...