கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மேயர் திடீர் ஆய்வு - அனுமதியின்றி வைத்திருந்த மாட்டு பண்ணையை காலி செய்ய உத்தரவு….!

மாநகராட்சியின் அனுமதி பெறாமல் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் இருந்த மாட்டுப் பண்ணையை உடனடியாக காலி செய்ய உத்தரவு பிறப்பித்த மேயர் கல்பனா ஆனந்தகுமார், இது குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.



கோவை: கோவை வெள்ளலூரில் இயங்கி வரும் குப்பை கிடங்கில், மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் அனுமதி இன்றி மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளனர். இது அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், அனுமதியின்றி நடத்தப்படும் மாட்டுப் பண்ணை கவுன்சிலர்களின் உதவியுடன் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல, அனுமதி இன்றி சில குழுவினரும் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை பொறுக்கி வருவதாகவும் புகார் எழுந்தது.



தொடர் புகார்கள் காரணமாக, வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்திற்கு கடந்த 1 ஆம் தேதி மாநகராட்சி மேயர் கல்பனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வை தொடர்ந்து மேயர், அங்கு நடைபெற்று வரும் அத்துமீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.



மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காமல் எப்படி மாட்டு பண்ணை செயல்பட்டு வருகிறது என கேள்வி எழுப்பிய மேயர், வரும் ஜன.1 ஆம் தேதிக்குள் அனைத்தையும் காலி செய்து விட வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மற்றும் மாட்டுப் பண்ணை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குப்பைகளை தரம் பிரித்தல், குப்பையை எருவாக மாற்றுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு, அப்பகுதி வாசிகளின் எதிர்ப்பு என பல ஆண்டுகளாக வெள்ளலூர் குப்பை கிடங்கை பராமரிப்பில் பெரும் சவாலை சந்தித்து கோவை மாநகராட்சிக்கு, குப்பை கிடங்கில் உள்ள மொத்த குப்பைகளையும் இன்னும் 15 மாதங்களுக்குள் அகற்ற ஏற்கனவே பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...