கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மேயர் திடீர் ஆய்வு - அனுமதியின்றி வைத்திருந்த மாட்டு பண்ணையை காலி செய்ய உத்தரவு….!

மாநகராட்சியின் அனுமதி பெறாமல் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் இருந்த மாட்டுப் பண்ணையை உடனடியாக காலி செய்ய உத்தரவு பிறப்பித்த மேயர் கல்பனா ஆனந்தகுமார், இது குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.



கோவை: கோவை வெள்ளலூரில் இயங்கி வரும் குப்பை கிடங்கில், மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் அனுமதி இன்றி மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளனர். இது அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், அனுமதியின்றி நடத்தப்படும் மாட்டுப் பண்ணை கவுன்சிலர்களின் உதவியுடன் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல, அனுமதி இன்றி சில குழுவினரும் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை பொறுக்கி வருவதாகவும் புகார் எழுந்தது.



தொடர் புகார்கள் காரணமாக, வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்திற்கு கடந்த 1 ஆம் தேதி மாநகராட்சி மேயர் கல்பனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வை தொடர்ந்து மேயர், அங்கு நடைபெற்று வரும் அத்துமீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.



மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காமல் எப்படி மாட்டு பண்ணை செயல்பட்டு வருகிறது என கேள்வி எழுப்பிய மேயர், வரும் ஜன.1 ஆம் தேதிக்குள் அனைத்தையும் காலி செய்து விட வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மற்றும் மாட்டுப் பண்ணை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குப்பைகளை தரம் பிரித்தல், குப்பையை எருவாக மாற்றுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு, அப்பகுதி வாசிகளின் எதிர்ப்பு என பல ஆண்டுகளாக வெள்ளலூர் குப்பை கிடங்கை பராமரிப்பில் பெரும் சவாலை சந்தித்து கோவை மாநகராட்சிக்கு, குப்பை கிடங்கில் உள்ள மொத்த குப்பைகளையும் இன்னும் 15 மாதங்களுக்குள் அகற்ற ஏற்கனவே பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...