கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மேயர் திடீர் ஆய்வு - அனுமதியின்றி வைத்திருந்த மாட்டு பண்ணையை காலி செய்ய உத்தரவு….!

மாநகராட்சியின் அனுமதி பெறாமல் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் இருந்த மாட்டுப் பண்ணையை உடனடியாக காலி செய்ய உத்தரவு பிறப்பித்த மேயர் கல்பனா ஆனந்தகுமார், இது குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.



கோவை: கோவை வெள்ளலூரில் இயங்கி வரும் குப்பை கிடங்கில், மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் அனுமதி இன்றி மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளனர். இது அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், அனுமதியின்றி நடத்தப்படும் மாட்டுப் பண்ணை கவுன்சிலர்களின் உதவியுடன் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல, அனுமதி இன்றி சில குழுவினரும் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை பொறுக்கி வருவதாகவும் புகார் எழுந்தது.



தொடர் புகார்கள் காரணமாக, வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்திற்கு கடந்த 1 ஆம் தேதி மாநகராட்சி மேயர் கல்பனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வை தொடர்ந்து மேயர், அங்கு நடைபெற்று வரும் அத்துமீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.



மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காமல் எப்படி மாட்டு பண்ணை செயல்பட்டு வருகிறது என கேள்வி எழுப்பிய மேயர், வரும் ஜன.1 ஆம் தேதிக்குள் அனைத்தையும் காலி செய்து விட வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மற்றும் மாட்டுப் பண்ணை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குப்பைகளை தரம் பிரித்தல், குப்பையை எருவாக மாற்றுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு, அப்பகுதி வாசிகளின் எதிர்ப்பு என பல ஆண்டுகளாக வெள்ளலூர் குப்பை கிடங்கை பராமரிப்பில் பெரும் சவாலை சந்தித்து கோவை மாநகராட்சிக்கு, குப்பை கிடங்கில் உள்ள மொத்த குப்பைகளையும் இன்னும் 15 மாதங்களுக்குள் அகற்ற ஏற்கனவே பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...