உலக மண் தினம்: மக்கள் தொடர்ந்து மண் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் - பெங்களூருவில் சத்குரு ஜக்கி வாசுதேவ்

உலக மண் தினத்தையொட்டி பெங்களூருவில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் #ScoreForSoil என்ற பிரச்சாரத்தை தொடங்கிய சத்குரு ஜக்கி வாசுதேவ், ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு மண் அழிகிறது என எச்சரிக்கை விடுத்தார்.


பெங்களூரு: கால்பந்தாட்ட சீசன் நடைபெறும் இவ்வேளையில், உலக அளவில் ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு வளமான மண்ணை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்; வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என உலக மண் தினமான இன்று (டிசம்பர் 5) சத்குரு கூறினார்.

உலக மண் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஈஷா அமைப்பின் மண் காப்போம் இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் ஈஷாவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில், நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர், சத்குரு ஜக்கி வாசுதேவ், #ScoreForSoil என்ற உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

கால்பந்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் வாயிலாக மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் இந்த வேளையில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களுடைய சிறந்த கால்பந்தாட்ட வீடியோவை #ScoreForSoil என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம்.

மேலும், அந்த வீடியோவில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியதாவது, நாம் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் உலகின் மண் வளத்தை 10 சதவீதம் இழந்துவிட்டோம். எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக நாம் ‘மண் காப்போம்’ இயக்கத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கினோம்.

இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு உலக அளவில் மண் தொடர்பான பார்வை மாறியுள்ளது. கடந்தாண்டு க்ளாகோவில் நடைபெற்ற COP 26 சுற்றுச்சூழல் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்காற்றும் ‘மண்’ குறித்து யாரும் பேசவில்லை. ஆனால், மண் காப்போம் இயக்கத்தின் பிரச்சாரத்தால் இந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற COP 27 மாநாட்டில் மண் வளம் குறித்த முக்கிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளது.

எனவே, மண் வள மீட்டெடுப்பு கொள்கைகள் உலகளவில் கட்டாயம் உருவாக்கப்படும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது எந்த வேகத்தில் நடக்கும் என்பது மட்டுமே என்னுடைய கவலையாக இருக்கிறது. எனவே, இந்த வேகத்தை துரிதப்படுத்துவதற்கு மக்கள் அனைவரும் பல்வேறு வழிகளில் மண் குறித்து தொடர்ந்து இடைவிடாமல் பேசி கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பெங்களூருவில் மண் வளப் பாதுகாப்பு தொடர்பான மோட்டார் சைக்கிள் பேரணியிலும் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்றார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...