உலக மண் தினம்: மக்கள் தொடர்ந்து மண் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் - பெங்களூருவில் சத்குரு ஜக்கி வாசுதேவ்

உலக மண் தினத்தையொட்டி பெங்களூருவில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் #ScoreForSoil என்ற பிரச்சாரத்தை தொடங்கிய சத்குரு ஜக்கி வாசுதேவ், ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு மண் அழிகிறது என எச்சரிக்கை விடுத்தார்.


பெங்களூரு: கால்பந்தாட்ட சீசன் நடைபெறும் இவ்வேளையில், உலக அளவில் ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு வளமான மண்ணை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்; வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என உலக மண் தினமான இன்று (டிசம்பர் 5) சத்குரு கூறினார்.

உலக மண் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஈஷா அமைப்பின் மண் காப்போம் இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் ஈஷாவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில், நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர், சத்குரு ஜக்கி வாசுதேவ், #ScoreForSoil என்ற உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

கால்பந்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் வாயிலாக மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் இந்த வேளையில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களுடைய சிறந்த கால்பந்தாட்ட வீடியோவை #ScoreForSoil என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம்.

மேலும், அந்த வீடியோவில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியதாவது, நாம் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் உலகின் மண் வளத்தை 10 சதவீதம் இழந்துவிட்டோம். எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக நாம் ‘மண் காப்போம்’ இயக்கத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கினோம்.

இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு உலக அளவில் மண் தொடர்பான பார்வை மாறியுள்ளது. கடந்தாண்டு க்ளாகோவில் நடைபெற்ற COP 26 சுற்றுச்சூழல் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்காற்றும் ‘மண்’ குறித்து யாரும் பேசவில்லை. ஆனால், மண் காப்போம் இயக்கத்தின் பிரச்சாரத்தால் இந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற COP 27 மாநாட்டில் மண் வளம் குறித்த முக்கிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளது.

எனவே, மண் வள மீட்டெடுப்பு கொள்கைகள் உலகளவில் கட்டாயம் உருவாக்கப்படும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது எந்த வேகத்தில் நடக்கும் என்பது மட்டுமே என்னுடைய கவலையாக இருக்கிறது. எனவே, இந்த வேகத்தை துரிதப்படுத்துவதற்கு மக்கள் அனைவரும் பல்வேறு வழிகளில் மண் குறித்து தொடர்ந்து இடைவிடாமல் பேசி கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பெங்களூருவில் மண் வளப் பாதுகாப்பு தொடர்பான மோட்டார் சைக்கிள் பேரணியிலும் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்றார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...