வருமான வரித்துறை வளர்ச்சியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது - கோவையில் வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன்

மேற்கு மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன், வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை திரட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் ஆன்லைன் மூலமே விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.


கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் ஆய்வு மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை ஆணையாளர் ரவிச்சந்திரன், இன்று மேற்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அகில இந்திய அளவில் வருமான வரித்துறை வளர்ச்சியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கூடுதலாக வசூல் செய்யப்பட்ட வரி திரும்ப வரவில்லை என்று புகார் இருந்தால் அந்த புகாரை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்தி உள்ளோம்.

இந்த ஆண்டு வருமான வரி செலுத்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளோம். ஆன்லைன் வழியாக வரி செலுத்தும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் வரி வசூல் 12 முதல் 13% குறைந்து இருந்தது. ஆனால், 2021-2022- ல் 40% வரி வசூல் அதிகரித்துள்ளது. 2022-2023 ஆண்டிலும் கிட்டத்தட்ட வரி வசூல் 40 சதவீதத்தை நெருங்கியுள்ளது.

வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை திரட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் எப்படியும் சிக்கிக் கொள்வார்கள். வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் ஆன்லைன் மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆவணங்களும் ஆன்லைன் மூலமே சரிபார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விசாரணை நடக்கும் போது ஒரு குறிப்பிட்ட அதிகாரி தான் விசாரிப்பார் என்ற நிலை இருக்காது.

நாட்டிலுள்ள ஏதாவது ஒரு அதிகாரி தான் விசாரணை நடத்துவார். வருமான வரி சோதனை தொடர்பான தகவல்களை தர மறுப்பது பயனாளர்களின் ரகசியங்களை பாதுகாக்க தான். முறையாக வரி செலுத்துவோருக்கு சிறப்பு போர்டல் வசதி உள்ளது.

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சிறை தண்டனையும் பெற்றுக் கொடுத்து உள்ளோம், இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...