மேற்கு மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன், வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை திரட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் ஆன்லைன் மூலமே விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் ஆய்வு மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை ஆணையாளர் ரவிச்சந்திரன், இன்று மேற்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அகில இந்திய அளவில் வருமான வரித்துறை வளர்ச்சியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கூடுதலாக வசூல் செய்யப்பட்ட வரி திரும்ப வரவில்லை என்று புகார் இருந்தால் அந்த புகாரை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்தி உள்ளோம்.
இந்த ஆண்டு வருமான வரி செலுத்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளோம். ஆன்லைன் வழியாக வரி செலுத்தும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு பின்னர் வரி வசூல் 12 முதல் 13% குறைந்து இருந்தது. ஆனால், 2021-2022- ல் 40% வரி வசூல் அதிகரித்துள்ளது. 2022-2023 ஆண்டிலும் கிட்டத்தட்ட வரி வசூல் 40 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை திரட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் எப்படியும் சிக்கிக் கொள்வார்கள். வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் ஆன்லைன் மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆவணங்களும் ஆன்லைன் மூலமே சரிபார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விசாரணை நடக்கும் போது ஒரு குறிப்பிட்ட அதிகாரி தான் விசாரிப்பார் என்ற நிலை இருக்காது.
நாட்டிலுள்ள ஏதாவது ஒரு அதிகாரி தான் விசாரணை நடத்துவார். வருமான வரி சோதனை தொடர்பான தகவல்களை தர மறுப்பது பயனாளர்களின் ரகசியங்களை பாதுகாக்க தான். முறையாக வரி செலுத்துவோருக்கு சிறப்பு போர்டல் வசதி உள்ளது.
வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சிறை தண்டனையும் பெற்றுக் கொடுத்து உள்ளோம், இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.
பின்னர், கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அகில இந்திய அளவில் வருமான வரித்துறை வளர்ச்சியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கூடுதலாக வசூல் செய்யப்பட்ட வரி திரும்ப வரவில்லை என்று புகார் இருந்தால் அந்த புகாரை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்தி உள்ளோம்.
இந்த ஆண்டு வருமான வரி செலுத்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளோம். ஆன்லைன் வழியாக வரி செலுத்தும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு பின்னர் வரி வசூல் 12 முதல் 13% குறைந்து இருந்தது. ஆனால், 2021-2022- ல் 40% வரி வசூல் அதிகரித்துள்ளது. 2022-2023 ஆண்டிலும் கிட்டத்தட்ட வரி வசூல் 40 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை திரட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் எப்படியும் சிக்கிக் கொள்வார்கள். வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் ஆன்லைன் மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆவணங்களும் ஆன்லைன் மூலமே சரிபார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விசாரணை நடக்கும் போது ஒரு குறிப்பிட்ட அதிகாரி தான் விசாரிப்பார் என்ற நிலை இருக்காது.
நாட்டிலுள்ள ஏதாவது ஒரு அதிகாரி தான் விசாரணை நடத்துவார். வருமான வரி சோதனை தொடர்பான தகவல்களை தர மறுப்பது பயனாளர்களின் ரகசியங்களை பாதுகாக்க தான். முறையாக வரி செலுத்துவோருக்கு சிறப்பு போர்டல் வசதி உள்ளது.
வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சிறை தண்டனையும் பெற்றுக் கொடுத்து உள்ளோம், இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.