குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண் மற்றும் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13 வது கொண்டை ஊசி வளைவில் இன்று மதியம் சாலை ஓரத்தில் இருந்த மண், பாறைகள் மற்றும் மரங்கள் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது. தீயணைப்பு துறையினர் அவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், திடீர் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.



இன்று, குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13 வது கொண்டை ஊசி வளைவில் இன்று மதியம் சாலை ஓரத்தில் இருந்த மண், பாறைகள் மற்றும் மரங்கள் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது.



பாறைகள் உருண்டு விழுவதைக் கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தினர்.



உடனடியாக தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மண் மற்றும் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதனால் குன்னூர் - மேட்ப்பாளையம் மலை பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது.

தொடர் மழை, சாலை விரிவாக்க பணிகளுக்காக மலை பகுதிகள் ஆங்காங்கே தோண்டப்பட்டு வருவது, கன ரக வாகனங்கள் அதிக அளவு செல்வது போன்ற காரணங்களினால் அதிர்வு ஏற்பட்டு மண் சரிவு ஏற்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மண் சரிந்து விழும் போது அவ்வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...