ராணுவ பயிற்சி விமானத்தில் 2 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதித்து உதகை அரசு கல்லூரி மாணவி சாகசம்..!

டெல்லியில் நடைபெற்ற என்சிசி பயிற்சியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு சாகச பட்டியலில் இடம் பிடித்த உதகை அரசு கலைக் கல்லூரி மாணவி கோகிலவாணிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



நீலகிரி: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலவாணி. இவர் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் தீவிர நாட்டம் கொண்ட இவர், பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றனர்.



அதில் தமிழ்நாடு சார்பாக கோகிலவாணி மட்டும் தேர்வாகி இந்தியா விமான படையின் பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் உதவியுடன் குதித்து சாகசப் பட்டியலில் இடம் பிடித்தார்.

மாணவி கோகிலவாணியின் பாராசூட் சாகசம் குறித்து தேசிய மாணவர் படை அலுவலர்கள் கூறியதாவது, உதகை அரசு கலை கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவி ஒருவர் பாரா கேம்ப் பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். இந்த முறை தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே பெண் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

அதற்கான உடல் தேர்வில் கோகிலவாணி தேர்ச்சி பெற்றிருந்தார். கடுமையான பல கட்ட பயிற்சிக்குப் பின்னர் அவர், பாரா கேம்ப் பயிற்சிக்கு தேர்வானார்.

கர்னல் ஸ்ரீனிவாஸின் ஊக்கத்தால் என்.சி.சி மாணவிகளுடன் பாராசூட் சாகசத்தில் அவர் வெற்றிகரமாக ஈடுபட்டார்.

இவ்வாறு என்.சி.சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

சாகசத்தில் ஈடுபட்ட மாணவிக்கு, கல்லூரி பேராசியரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தர்ப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...