ராணுவ பயிற்சி விமானத்தில் 2 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதித்து உதகை அரசு கல்லூரி மாணவி சாகசம்..!

டெல்லியில் நடைபெற்ற என்சிசி பயிற்சியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு சாகச பட்டியலில் இடம் பிடித்த உதகை அரசு கலைக் கல்லூரி மாணவி கோகிலவாணிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



நீலகிரி: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலவாணி. இவர் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் தீவிர நாட்டம் கொண்ட இவர், பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றனர்.



அதில் தமிழ்நாடு சார்பாக கோகிலவாணி மட்டும் தேர்வாகி இந்தியா விமான படையின் பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் உதவியுடன் குதித்து சாகசப் பட்டியலில் இடம் பிடித்தார்.

மாணவி கோகிலவாணியின் பாராசூட் சாகசம் குறித்து தேசிய மாணவர் படை அலுவலர்கள் கூறியதாவது, உதகை அரசு கலை கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவி ஒருவர் பாரா கேம்ப் பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். இந்த முறை தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே பெண் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

அதற்கான உடல் தேர்வில் கோகிலவாணி தேர்ச்சி பெற்றிருந்தார். கடுமையான பல கட்ட பயிற்சிக்குப் பின்னர் அவர், பாரா கேம்ப் பயிற்சிக்கு தேர்வானார்.

கர்னல் ஸ்ரீனிவாஸின் ஊக்கத்தால் என்.சி.சி மாணவிகளுடன் பாராசூட் சாகசத்தில் அவர் வெற்றிகரமாக ஈடுபட்டார்.

இவ்வாறு என்.சி.சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

சாகசத்தில் ஈடுபட்ட மாணவிக்கு, கல்லூரி பேராசியரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தர்ப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...