கோவையில் கஞ்சா விற்க முயன்ற அசாம் வாலிபர் கைது; 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற அசாம் மாநில வாலிபரை கைது செய்த போலீசார், அவர் பையில் இருந்த 5 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு துறை போலீசார் மலுமிச்சம்பட்டியில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் இருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த வாலிபரிடம் விசாரித்த போது, அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோனு குமார் முகியா என்பதும், அவர் கஞ்சா விற்க முயன்றதும் தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா, செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைதான சோனு குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...