அருந்ததியர் சமூக மக்களின் இலவச வீட்டு மனை கோரிக்கை - முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என இருகூர் பேரூராட்சி தலைவர் உறுதி

சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரனிடம் ராவத்தூர் பகுதி அருந்ததியர் சமூகத்தினர் மனு அளித்த நிலையில், முதலமைச்சர் மற்றும் பொறுப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராவத்தூர் பகுதி அருந்ததியர் சமூக மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், கோட்டை முதல் கொத்தளம் வரை மனுக்கள் கொடுத்தும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதாக இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ.சந்திரனிடம் மனு அளித்தனர்.

அப்போது, இருகூர் பேருராட்சி தலைவர் ஆ.சந்திரன் முதலமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அருந்ததியர் சமூக மக்களின் 10 ஆண்டு கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.



இந்த நிகழ்வின் போது, மன்ற உறுப்பினர் நதியா ரவிச்சந்திரன் மற்றும் மக்கள் வழிகாட்டி இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மயில்சாமி, மற்றும் கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...