அருந்ததியர் சமூக மக்களின் இலவச வீட்டு மனை கோரிக்கை - முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என இருகூர் பேரூராட்சி தலைவர் உறுதி

சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரனிடம் ராவத்தூர் பகுதி அருந்ததியர் சமூகத்தினர் மனு அளித்த நிலையில், முதலமைச்சர் மற்றும் பொறுப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராவத்தூர் பகுதி அருந்ததியர் சமூக மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், கோட்டை முதல் கொத்தளம் வரை மனுக்கள் கொடுத்தும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதாக இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ.சந்திரனிடம் மனு அளித்தனர்.

அப்போது, இருகூர் பேருராட்சி தலைவர் ஆ.சந்திரன் முதலமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அருந்ததியர் சமூக மக்களின் 10 ஆண்டு கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.



இந்த நிகழ்வின் போது, மன்ற உறுப்பினர் நதியா ரவிச்சந்திரன் மற்றும் மக்கள் வழிகாட்டி இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மயில்சாமி, மற்றும் கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...