அருந்ததியர் சமூக மக்களின் இலவச வீட்டு மனை கோரிக்கை - முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என இருகூர் பேரூராட்சி தலைவர் உறுதி

சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரனிடம் ராவத்தூர் பகுதி அருந்ததியர் சமூகத்தினர் மனு அளித்த நிலையில், முதலமைச்சர் மற்றும் பொறுப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராவத்தூர் பகுதி அருந்ததியர் சமூக மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், கோட்டை முதல் கொத்தளம் வரை மனுக்கள் கொடுத்தும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதாக இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ.சந்திரனிடம் மனு அளித்தனர்.

அப்போது, இருகூர் பேருராட்சி தலைவர் ஆ.சந்திரன் முதலமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அருந்ததியர் சமூக மக்களின் 10 ஆண்டு கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.



இந்த நிகழ்வின் போது, மன்ற உறுப்பினர் நதியா ரவிச்சந்திரன் மற்றும் மக்கள் வழிகாட்டி இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மயில்சாமி, மற்றும் கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...