நீலகிரி கூடலூரில் 11வது நாளாக தொடரும் PM2 மக்னா யானையை பிடிக்கும் பணி - பொதுமக்கள் அச்சம்..!

கூடலூர் அடுத்த தேவாலா பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM2 மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வசதியான இடத்திற்கு வரும் வரை காத்திருக்க வனத்துறை முடிவு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா வாழவையல் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்தி பாப்பாத்தி என்ற பெண்மணியை PM2 மக்னா யானை தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இச்சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து யானையை பிடிக்க அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி முதல் வனத்துறையினர் யானையை பிடிப்பதற்கான பணியை தொடங்கினர். அப்போது அந்த யானை கேரள மாநில எல்லையோரத்திற்குச் சென்றதால், மீண்டும் அந்த PM2 யானை தேவாலா பகுதிக்கு வரும் வரை வனத்துறையினர் காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அந்த யானை தேவாலா பகுதிக்கு வந்தது. இதனையடுத்து அதனைப் பிடிப்பதற்கான நடவடிக்கையை கூடலூர் வனத்துறையினர் மேற்கொண்ட நிலையில் அந்த யானை புளியம்பாறை அடுத்துள்ள கோழி கொல்லி ஆதிவாசி கிராமத்தை ஒட்டி இடம்பெயர்ந்தது.



யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது, யானை மலை சரிவில் இருந்ததால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் மூலம் எளிதில் பிடித்து லாரியில் ஏற்றுவதற்கு வசதியான இடத்திற்கு வரும் வரை காத்திருந்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11வது நாளாக இன்றும் மக்னா யானையை பிடிப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...