கோவை அருகே வாய்க்காலில் இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

கோவை வீரகேரளம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண் ஒருவர் வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை வடவள்ளி அடுத்த வீரகேரளம் ராஜ் நாயுடு லேஅவுட்டை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது இளைய மகள் நிஷாந்திக்குவலிப்பு நோய் இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக மருந்துகளை அவர் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிஷாந்தி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அச்சமடைந்த அவரது பெற்றோர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்தியை தேடி வந்தனர். இந்நிலையில் வீரகேரளம் கிளை வாய்க்காலில் இளம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, சடலமாக மீட்கப்பட்டவர் நிஷாந்தி என்பது தெரியவந்தது.



இதை அடுத்து அவரது உடலைபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் நிஷாந்தி வலிப்பு ஏற்பட்டு தவறி வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...