கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமைதிக்கும் குந்தகம் ஏற்படும்படியாக பதிவிட்டு கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை, இன்று ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபினின் இறுதி சடங்குகள் நடத்த ஜமாத்துகள் மறுத்த செய்திகளை மையமாக வைத்து அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வலதுசாரி ஆதரவாளரான கிஷோர் கே.சாமி மீது, கோவை சைபர் கிரைம் போலீசார் சட்ட பிரிவு 153-ன் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறாக செய்தி பதிவிட்ட வேறொரு வழக்கில் கிஷோர் கே.சாமி ஏற்கனவே சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கோவை மாவட்ட 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் கிஷோர் கே சாமி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கிஷோர் கே சாமியை இன்று ஒரு நாள் (நவ 28) காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து, போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற் பரிசோதனை செய்தனர். பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...