கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமைதிக்கும் குந்தகம் ஏற்படும்படியாக பதிவிட்டு கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை, இன்று ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபினின் இறுதி சடங்குகள் நடத்த ஜமாத்துகள் மறுத்த செய்திகளை மையமாக வைத்து அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வலதுசாரி ஆதரவாளரான கிஷோர் கே.சாமி மீது, கோவை சைபர் கிரைம் போலீசார் சட்ட பிரிவு 153-ன் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறாக செய்தி பதிவிட்ட வேறொரு வழக்கில் கிஷோர் கே.சாமி ஏற்கனவே சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கோவை மாவட்ட 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் கிஷோர் கே சாமி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கிஷோர் கே சாமியை இன்று ஒரு நாள் (நவ 28) காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து, போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற் பரிசோதனை செய்தனர். பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...