கோவையில் குடிநீர் விநியோகம், தூய்மை பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப்‌ பணிகள்‌, தார்சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 42-க்குட்பட்ட வேலாண்டிபாளையம்‌, தவசி நகா்‌ பகுதிகளில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்.



மேலும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளார்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



இதனைதொடர்ந்து அதே பகுதிகளில்‌ டெங்கு கொசு ஓழிப்பு பணியாளார்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பதை கண்டறிவது போன்ற பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்‌.

அதனைத்‌ தொடாந்து, வேலாண்டிபாளையம்‌, கோவில்மேடு உயாநிலைப்பள்ளி வளாகத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ 22.50 லட்சம்‌ ரூபாய் மதிப்பீட்டில்‌ கழிப்பிடம்‌ கட்டூம்‌ பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவில்மேடு சாஸ்திரி நகரில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அப்பகுதிகளை நிலஅளவை செய்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌. பின்னர் தவசி நகா்‌ பகுதியில்‌ உள்ள செம்மொழி பூங்காவினை ஆய்வு செய்த ஆணையாளர் பூங்காவினை தூய்மையாக பராமரித்திட அறிவுறுத்தினார்.

மேலும் தவசி நகர்‌ பகுதியில்‌ உள்ள மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்து, அவற்றை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌ உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல தலைவா்‌ தெய்வபானை தமிழ்மறை, உதவி ஆணையாளர்‌ சேகா்‌, மாமன்ற உறுப்பினர் பிரவீன்ராஜ், உதவி செயற்பொறியாளர்‌, மண்டல சுகாதார அலுவலர், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...