உதகையில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்த நிலையில், சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது 2-வது சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், அரசு தாவரவியல் பூங்காவை காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனிடையே இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வரும் சூழலில், உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தவாறே சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர்.

குறிப்பாக மழையையும் பொருட்படுத்தாமல் தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, புல் மைதானம், கல்மரம், இத்தாலியன் பூங்கா, ஜேஜே நினைவுத்தூண் உள்ளிட்டவற்றை கண்டு மகிழ்ந்தனர்.
மழையில் குடையை பிடித்தவாறு குடும்பத்தோடு பூங்காவை கண்டு ரசித்ததோடு மலர் மாடம், மரங்களுக்கு கீழ் அமர்ந்து கால நிலையை அனுபவித்தனர். இதனால் 2-வது சீசன் முடியும் தருவாயில் தற்போது களைகட்டியுள்ளது.
குறிப்பாக கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், அரசு தாவரவியல் பூங்காவை காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனிடையே இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வரும் சூழலில், உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தவாறே சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர்.
குறிப்பாக மழையையும் பொருட்படுத்தாமல் தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, புல் மைதானம், கல்மரம், இத்தாலியன் பூங்கா, ஜேஜே நினைவுத்தூண் உள்ளிட்டவற்றை கண்டு மகிழ்ந்தனர்.
மழையில் குடையை பிடித்தவாறு குடும்பத்தோடு பூங்காவை கண்டு ரசித்ததோடு மலர் மாடம், மரங்களுக்கு கீழ் அமர்ந்து கால நிலையை அனுபவித்தனர். இதனால் 2-வது சீசன் முடியும் தருவாயில் தற்போது களைகட்டியுள்ளது.