சுற்றுலா பயணிகளால் களை கட்டிய உதகை - சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் தாவரவியல் பூங்காவில் குவிந்த பயணிகள்

உதகையில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்த நிலையில், சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது 2-வது சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், அரசு தாவரவியல் பூங்காவை காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.



இதனிடையே இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வரும் சூழலில், உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தவாறே சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர்.



குறிப்பாக மழையையும் பொருட்படுத்தாமல் தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, புல் மைதானம், கல்மரம், இத்தாலியன் பூங்கா, ஜேஜே நினைவுத்தூண் உள்ளிட்டவற்றை கண்டு மகிழ்ந்தனர்.

மழையில் குடையை பிடித்தவாறு குடும்பத்தோடு பூங்காவை கண்டு ரசித்ததோடு மலர் மாடம், மரங்களுக்கு கீழ் அமர்ந்து கால நிலையை அனுபவித்தனர். இதனால் 2-வது சீசன் முடியும் தருவாயில் தற்போது களைகட்டியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...