கோவை கார் வெடிப்பு குறித்து அவதூறு பதிவு-கிஷோர்.கே.சாமியை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் அவதூறாக பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள கிஷோர்.கே.சாமியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு.


கோவை: கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்படையினர் நடத்திய விசாரணையில் அம்பலமானது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபினின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது ஜமாத்துகள் முன்வரவில்லை.

அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய முயன்ற நபரை அடக்கம் செய்ய முதலில் மறுத்திருக்கின்றனர். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் முபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்தது குறித்து தகவல் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அதனை ரீ டுவிட் செய்த கிஷோர் கே சாமி குண்டு ஒழுங்காக வைக்க தெரியாத நபரை ஜமாத்துக்கள் எப்படி அடக்கம் செய்வார்கள் என்ற பொருளில் பதிவு செய்திருந்தார்.

கிஷோர் கே சாமியின் இந்த பதிவு இந்து - முஸ்லீம் இடையே பிரச்சினையை தூண்டி விடும் வகையில் இருந்தது. இதனையறிந்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கிஷோர்.கே.சாமி, மீது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

153 IPC - கலகம் செய்வதற்குத் தூண்டி விட்டு அதனால் கலகம் ஏற்பட்டால் அந்தக் கலகத்தைத் தூண்டியவருக்கு ஓர் ஆண்டுக்கு மேற்படாத சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கிஷோர்.கே.சாமியை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி சரவண பிரபு முன்பாக ஆஜர்படுத்தி அவரை 2 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...