கோவை கார் வெடிப்பு குறித்து அவதூறு பதிவு-கிஷோர்.கே.சாமியை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் அவதூறாக பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள கிஷோர்.கே.சாமியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு.


கோவை: கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்படையினர் நடத்திய விசாரணையில் அம்பலமானது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபினின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது ஜமாத்துகள் முன்வரவில்லை.

அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய முயன்ற நபரை அடக்கம் செய்ய முதலில் மறுத்திருக்கின்றனர். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் முபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்தது குறித்து தகவல் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அதனை ரீ டுவிட் செய்த கிஷோர் கே சாமி குண்டு ஒழுங்காக வைக்க தெரியாத நபரை ஜமாத்துக்கள் எப்படி அடக்கம் செய்வார்கள் என்ற பொருளில் பதிவு செய்திருந்தார்.

கிஷோர் கே சாமியின் இந்த பதிவு இந்து - முஸ்லீம் இடையே பிரச்சினையை தூண்டி விடும் வகையில் இருந்தது. இதனையறிந்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கிஷோர்.கே.சாமி, மீது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

153 IPC - கலகம் செய்வதற்குத் தூண்டி விட்டு அதனால் கலகம் ஏற்பட்டால் அந்தக் கலகத்தைத் தூண்டியவருக்கு ஓர் ஆண்டுக்கு மேற்படாத சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கிஷோர்.கே.சாமியை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி சரவண பிரபு முன்பாக ஆஜர்படுத்தி அவரை 2 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...