செட்டிபாளையம் அருகே கோர விபத்து: டிப்பர் லாரி மோதி மென்பொறியாளர் உயிரிழப்பு…!

செட்டிபாளையம் ரயில்வே மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த டெப்ரிங் ஸ்ட்ராங் (24) மீது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை செட்டிபாளையம் அருகே டிப்பர் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற மென் பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை சுந்தராபுரம் கஸ்தூரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (51), (ஆங்கிலோ இந்தின் ) பொறியாளர். இவரது மகன் டெப்ரிங் ஸ்ட்ராங் (24) தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று வார விடுமுறை என்பதால்டெப்ரிங் ஸ்ட்ராங்தனது நண்பர்களுடன் சுந்தராபுரத்திலிருந்து மலுமிச்சம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் மலுமிச்சம்பட்டியில் இருந்து மீண்டும் செட்டிபாளையம் செல்லசெட்டிபாளையம் ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட டெப்ரிங் ஸ்ட்ராங்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் டெப்ரிங் ஸ்ட்ராங்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருச்சியை சேர்ந்த லாரி ஓட்டுநர் நவீன்குமார் (27) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...