செட்டிபாளையம் ரயில்வே மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த டெப்ரிங் ஸ்ட்ராங் (24) மீது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவை செட்டிபாளையம் அருகே டிப்பர் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற மென் பொறியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை சுந்தராபுரம் கஸ்தூரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (51), (ஆங்கிலோ இந்தின் ) பொறியாளர். இவரது மகன் டெப்ரிங் ஸ்ட்ராங் (24) தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இன்று வார விடுமுறை என்பதால்டெப்ரிங் ஸ்ட்ராங்தனது நண்பர்களுடன் சுந்தராபுரத்திலிருந்து மலுமிச்சம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் மலுமிச்சம்பட்டியில் இருந்து மீண்டும் செட்டிபாளையம் செல்லசெட்டிபாளையம் ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட டெப்ரிங் ஸ்ட்ராங்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் டெப்ரிங் ஸ்ட்ராங்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருச்சியை சேர்ந்த லாரி ஓட்டுநர் நவீன்குமார் (27) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் கஸ்தூரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (51), (ஆங்கிலோ இந்தின் ) பொறியாளர். இவரது மகன் டெப்ரிங் ஸ்ட்ராங் (24) தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இன்று வார விடுமுறை என்பதால்டெப்ரிங் ஸ்ட்ராங்தனது நண்பர்களுடன் சுந்தராபுரத்திலிருந்து மலுமிச்சம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் மலுமிச்சம்பட்டியில் இருந்து மீண்டும் செட்டிபாளையம் செல்லசெட்டிபாளையம் ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட டெப்ரிங் ஸ்ட்ராங்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் டெப்ரிங் ஸ்ட்ராங்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருச்சியை சேர்ந்த லாரி ஓட்டுநர் நவீன்குமார் (27) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.