கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் கருத்தரங்கம்

கோவை ரயில் நிலையம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சாதி ஒழிப்பு போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


கோவை: கடந்த 1957ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதிசாதி ஒழிப்பிற்காக மாபெரும் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. அன்றைய தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய சட்ட பிரிவுகள் சிலவை சாதியை பாதுகாப்பது போல் உள்ளதாக கூறி அதனை எரித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிறையிலேயே உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஆண்டுதோறும் அந்த போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.



கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில்கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேராசிரியர் சாரோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடக் கழக மாநில அமைப்பு செயலாளர் ஆறுசாமி, வெளியீட்டு செயலாளர் மனோகரன், பெரியார் மற்றும் அம்பேத்கர் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...