கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் கருத்தரங்கம்

கோவை ரயில் நிலையம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சாதி ஒழிப்பு போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


கோவை: கடந்த 1957ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதிசாதி ஒழிப்பிற்காக மாபெரும் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. அன்றைய தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய சட்ட பிரிவுகள் சிலவை சாதியை பாதுகாப்பது போல் உள்ளதாக கூறி அதனை எரித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிறையிலேயே உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஆண்டுதோறும் அந்த போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.



கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில்கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேராசிரியர் சாரோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடக் கழக மாநில அமைப்பு செயலாளர் ஆறுசாமி, வெளியீட்டு செயலாளர் மனோகரன், பெரியார் மற்றும் அம்பேத்கர் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...