கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 800-க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை நல வாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார்.
கோவை: ராமநாதபுரம் பகுதியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தாமதமின்றி வழங்குவது குறித்தும், நல வாரியங்களை மேம்படுத்துவது குறித்தும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

மேலும் கோவை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 764 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 17 லட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் இயற்கையாக மரணமடைந்த 11 தொழிலாளர்களின் நியமனதாரர்களுக்கு 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
மேலும் விபத்தில் மரணமடைந்த ஒரு தொழிலாளியின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மற்றும் புதிதாக ஒப்பளிப்பு செய்யப்பட்ட 103 ஓய்வூதியதாரர்களுக்கு 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 879 பயனாளிகளுக்கு 23 லட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி, தொழிலாளர் உதவி ஆணையர் காயத்திரி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கோவை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 764 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 17 லட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் இயற்கையாக மரணமடைந்த 11 தொழிலாளர்களின் நியமனதாரர்களுக்கு 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
மேலும் விபத்தில் மரணமடைந்த ஒரு தொழிலாளியின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மற்றும் புதிதாக ஒப்பளிப்பு செய்யப்பட்ட 103 ஓய்வூதியதாரர்களுக்கு 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 879 பயனாளிகளுக்கு 23 லட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி, தொழிலாளர் உதவி ஆணையர் காயத்திரி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.