கோவையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 800-க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை நல வாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார்.


கோவை: ராமநாதபுரம் பகுதியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தாமதமின்றி வழங்குவது குறித்தும், நல வாரியங்களை மேம்படுத்துவது குறித்தும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது.



மேலும் கோவை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 764 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 17 லட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் இயற்கையாக மரணமடைந்த 11 தொழிலாளர்களின் நியமனதாரர்களுக்கு 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

மேலும் விபத்தில் மரணமடைந்த ஒரு தொழிலாளியின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மற்றும் புதிதாக ஒப்பளிப்பு செய்யப்பட்ட 103 ஓய்வூதியதாரர்களுக்கு 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 879 பயனாளிகளுக்கு 23 லட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி, தொழிலாளர் உதவி ஆணையர் காயத்திரி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...