காட்டூர் அருகே போலீசார் வாகன சோதனையின் போது, குட்கா கடத்தி வந்த 2 வட மாநில இளைஞர்கள் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 350 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புழக்கத்திலிருந்து ஒழிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் வாகன தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில் காட்டூர் காவல் நிலைய போலீசார் சோமசுந்தரம் மில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுஜாராம், கோவிந்த் மீனா ஆகிய 2 வட மாநில இளைஞர்கள் மற்றும் செந்தில்வேல் என்ற சூரியா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 350 கிலோ குட்கா மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வாகன சோதனையில் 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் காட்டூர் காவல் நிலைய போலீசார் சோமசுந்தரம் மில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுஜாராம், கோவிந்த் மீனா ஆகிய 2 வட மாநில இளைஞர்கள் மற்றும் செந்தில்வேல் என்ற சூரியா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 350 கிலோ குட்கா மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வாகன சோதனையில் 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.