டைரிகளில் ஜாதி அடையாளங்களை குறிப்பிட சொல்லும் தனியார் பள்ளிகள் - கோவையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில், மாணவர்களின் நாட்குறிப்பில் ஜாதியை எழுத சொல்லும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிஞ்சு மனதில் ஜாதி வெறியை விதைக்க கூடாது எனவும் வலியுறுத்தினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் பள்ளி வீட்டுப்பாட கையேடுகளில் (Diary) ஜாதி பிரிவுகளை குறிப்பிட சொல்லுவதாக கூறி சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைகள் எழுந்தன.



இந்நிலையில் அந்த தனியார் பள்ளிகளை கண்டித்தும் கோவை மாவட்ட கல்வித்துறையை கண்டித்தும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் நாட்குறிப்பில் ஜாதியை எழுத சொல்லும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் பிஞ்சு மனதில் ஜாதி வெறியை விதைக்க கூடாது என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட தோழமை கட்சிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளிகளிலும் UGC பல்கலைக்கழகங்களிலும் சனாதனம் நாட்டுக்கு பெரும் அவமானம் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...