வீர மரணம் அடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில், ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்ட பிரிவுகளான 13, 25, 26, 372 ஆகியவற்றை தீயிட்டு எரித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் வீரவணக்கம் செலுத்தினர்.
கோவை: கடந்த 1957ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியல் சட்ட பிரிவுகள் 13, 25, 26, 372 ஆகியவை ஜாதிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளதாக கூறி நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் அவர்களில் பலரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.
அன்றிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் இந்நாளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இதில் திராவிட விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர்.
இதில் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் அவர்களில் பலரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.
அன்றிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் இந்நாளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
இதில் திராவிட விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர்.