ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை தீயிட்டு எரித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் வீரவணக்கம்..!

வீர மரணம் அடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில், ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்ட பிரிவுகளான 13, 25, 26, 372 ஆகியவற்றை தீயிட்டு எரித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் வீரவணக்கம் செலுத்தினர்.


கோவை: கடந்த 1957ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியல் சட்ட பிரிவுகள் 13, 25, 26, 372 ஆகியவை ஜாதிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளதாக கூறி நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் அவர்களில் பலரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.

அன்றிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் இந்நாளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.



அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.



இதில் திராவிட விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...