நீலகிரி உதகை அருகே கடைகளை உடைத்து சேதப்படுத்திய கரடிகள் - பொதுமக்கள் அச்சம்..!

உதகை அடுத்த கல்லட்டி பகுதியில் புகுந்த 2 கரடிகள் அங்குள்ள டீ கடை உள்ளிட்ட 3 கடைகளை உடைத்து சேதப்படுத்திய நிலையில், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், உடனடியாக கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கரடிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி உலா வரும் கரடிகள், உணவு தேடி வீடுகளுக்குள் புகுந்து விடுவதால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் உதகை அடுத்த கல்லட்டி பகுதிக்குள் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 கரடிகள், அடுத்தடுத்து 3 கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சேதபடுத்தி உள்ளன.



முதலில் டீ கடைக்குள் புகுந்த கரடிகள் பாத்திரங்களையும் உணவு பொருட்களையும் வெளியில் எடுத்து வந்து சேதப்படுத்தி உள்ளன.



இதனையடுத்து அந்த கரடிகள் வீடு வீடாக உணவு தேடி சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனிடையே கரடிகள் கடைகளுக்குள் சென்று வெளியில் வந்து சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பொது மக்களை அச்சுறுத்தி வரும் 2 கரடிகளையும் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என உதகை வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...