நீலகிரி உதகை அருகே கடைகளை உடைத்து சேதப்படுத்திய கரடிகள் - பொதுமக்கள் அச்சம்..!

உதகை அடுத்த கல்லட்டி பகுதியில் புகுந்த 2 கரடிகள் அங்குள்ள டீ கடை உள்ளிட்ட 3 கடைகளை உடைத்து சேதப்படுத்திய நிலையில், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், உடனடியாக கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கரடிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி உலா வரும் கரடிகள், உணவு தேடி வீடுகளுக்குள் புகுந்து விடுவதால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் உதகை அடுத்த கல்லட்டி பகுதிக்குள் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 கரடிகள், அடுத்தடுத்து 3 கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சேதபடுத்தி உள்ளன.



முதலில் டீ கடைக்குள் புகுந்த கரடிகள் பாத்திரங்களையும் உணவு பொருட்களையும் வெளியில் எடுத்து வந்து சேதப்படுத்தி உள்ளன.



இதனையடுத்து அந்த கரடிகள் வீடு வீடாக உணவு தேடி சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனிடையே கரடிகள் கடைகளுக்குள் சென்று வெளியில் வந்து சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பொது மக்களை அச்சுறுத்தி வரும் 2 கரடிகளையும் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என உதகை வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...