கோவை ரத்தினபுரியில் தொடரும் இருசக்கர வாகன உதிரிபாக திருட்டு - ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை

ரத்தினபுரி மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த சரவணன் என்பவரது இருசக்கர வாகனத்தின் உதிரிபாகம் திருடப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நபரை போலீசாரிடம் பிடித்து கொடுத்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் ரத்தினபுரி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன உதிரிபாகங்கள் திருடப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போலீசாரும் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த சரவணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் வழக்கம்போல் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.



மறுநாள் காலையில் பார்த்த பொழுது வாகனம் சேதமடைந்து அதன் உதிரி பாகங்கள் மட்டும் திருடு போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



இதுதொடர்பாக சரவணன் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.



சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் இரண்டு நபர்கள், பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்து உதிரிபாகங்களை திருடியது தெரியவந்தது.



மேலும் திருடிச் சென்றவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் சிவானந்த காலனி அண்ணா நகர் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளது.



இந்நிலையில் போலீசார் அங்கு சென்று விசாரித்த பொழுது சிசிடிவி காட்சிகளில் திருடிச் சென்ற நபரே அங்கு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை பிடித்த சரவணன் அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் போலீசார் அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...