கோவை தெலுங்குபாளையம் அருகே பேருந்தில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சி பெண் கைது..!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக பெண் பணியாளர் ஹேமலதாவிடம் ஓடும் பேருந்தில், 5.5 சவரன் தங்க நகையை பறிக்க முயன்ற திருச்சியை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (40). இவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம் போல பணி முடிந்து ஹேமலதா தனியார் பேருந்தில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது பேருந்து குப்புசாமிநாயுடு மருத்துவமனை நிறுத்தம் அருகே வந்த போது பேருந்தில் வந்த மற்றொரு பெண் திடீரென ஹேமலதா அணிந்திருந்த 5.5 சவரன் செயினை பறித்துக கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

இந்நிலையில், ஹேமலதா சத்தம் போடவே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து பந்தைய சாலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.



இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட பெண் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கவுரி என்பதும், இவர் குழுவாக செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த பெண் பல்வேறு பெயர்களில் சுற்றித் திரிந்ததோடு இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓடும் பேருந்தில் நீதிமன்ற பெண் ஊழியரின் தங்க நகையை மற்றொரு பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...