கோவை தெலுங்குபாளையம் அருகே பேருந்தில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சி பெண் கைது..!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக பெண் பணியாளர் ஹேமலதாவிடம் ஓடும் பேருந்தில், 5.5 சவரன் தங்க நகையை பறிக்க முயன்ற திருச்சியை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (40). இவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம் போல பணி முடிந்து ஹேமலதா தனியார் பேருந்தில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது பேருந்து குப்புசாமிநாயுடு மருத்துவமனை நிறுத்தம் அருகே வந்த போது பேருந்தில் வந்த மற்றொரு பெண் திடீரென ஹேமலதா அணிந்திருந்த 5.5 சவரன் செயினை பறித்துக கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

இந்நிலையில், ஹேமலதா சத்தம் போடவே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து பந்தைய சாலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.



இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட பெண் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கவுரி என்பதும், இவர் குழுவாக செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த பெண் பல்வேறு பெயர்களில் சுற்றித் திரிந்ததோடு இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓடும் பேருந்தில் நீதிமன்ற பெண் ஊழியரின் தங்க நகையை மற்றொரு பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...