கோவை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை தம்பாகவுண்டம்பாளையம் பகுதி அருகே கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தி செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அவ்வாறு கடத்தப்படும் அரிசியை குடிமை பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ஒத்தக்கால்மண்டபம் - வேலந்தாவளம் சாலையில் உள்ள தம்பாகவுடன்பாளையம் பகுதியில் குடிமை பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தனியார் நிலத்தில் மூட்டை மூட்டையாய் ரேசன் அரிசி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்த முயன்ற மதுக்கரையை சேர்ந்த காசிமாயன் என்பவரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை குடோனுக்கு அனுப்பி வைத்த போலீசார்,கைது செய்யப்பட்ட காசிமாயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...