கோவை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை தம்பாகவுண்டம்பாளையம் பகுதி அருகே கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தி செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அவ்வாறு கடத்தப்படும் அரிசியை குடிமை பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ஒத்தக்கால்மண்டபம் - வேலந்தாவளம் சாலையில் உள்ள தம்பாகவுடன்பாளையம் பகுதியில் குடிமை பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தனியார் நிலத்தில் மூட்டை மூட்டையாய் ரேசன் அரிசி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்த முயன்ற மதுக்கரையை சேர்ந்த காசிமாயன் என்பவரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை குடோனுக்கு அனுப்பி வைத்த போலீசார்,கைது செய்யப்பட்ட காசிமாயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...