கோவை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை தம்பாகவுண்டம்பாளையம் பகுதி அருகே கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தி செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அவ்வாறு கடத்தப்படும் அரிசியை குடிமை பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ஒத்தக்கால்மண்டபம் - வேலந்தாவளம் சாலையில் உள்ள தம்பாகவுடன்பாளையம் பகுதியில் குடிமை பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தனியார் நிலத்தில் மூட்டை மூட்டையாய் ரேசன் அரிசி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்த முயன்ற மதுக்கரையை சேர்ந்த காசிமாயன் என்பவரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை குடோனுக்கு அனுப்பி வைத்த போலீசார்,கைது செய்யப்பட்ட காசிமாயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...