கோவை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை தம்பாகவுண்டம்பாளையம் பகுதி அருகே கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தி செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அவ்வாறு கடத்தப்படும் அரிசியை குடிமை பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ஒத்தக்கால்மண்டபம் - வேலந்தாவளம் சாலையில் உள்ள தம்பாகவுடன்பாளையம் பகுதியில் குடிமை பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தனியார் நிலத்தில் மூட்டை மூட்டையாய் ரேசன் அரிசி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்த முயன்ற மதுக்கரையை சேர்ந்த காசிமாயன் என்பவரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை குடோனுக்கு அனுப்பி வைத்த போலீசார்,கைது செய்யப்பட்ட காசிமாயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...