கோவை கணுவாய் அருகே கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்..!

கணுவாய் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் வடமாநில இளைஞர் அஜய் பாஸ்போர் என்பவர் அதே பகுதியில் டீ மாஸ்டராக இருந்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.


கோவை: கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் தலைமையில் அங்கு சென்ற போலீசார் கணுவாய் ராமர் கோவில் வீதி பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த வட மாநில இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த அஜய் பாஸ்போர் (24) என்பதும், இவர் அதே பகுதியில் டீ மாஸ்டராக வேலை செய்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டீ மாஸ்டராக வேலை செய்து வந்த வடமாநில இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...