கணுவாய் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் வடமாநில இளைஞர் அஜய் பாஸ்போர் என்பவர் அதே பகுதியில் டீ மாஸ்டராக இருந்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
கோவை: கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் தலைமையில் அங்கு சென்ற போலீசார் கணுவாய் ராமர் கோவில் வீதி பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த வட மாநில இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த அஜய் பாஸ்போர் (24) என்பதும், இவர் அதே பகுதியில் டீ மாஸ்டராக வேலை செய்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டீ மாஸ்டராக வேலை செய்து வந்த வடமாநில இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அங்கிருந்த வட மாநில இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த அஜய் பாஸ்போர் (24) என்பதும், இவர் அதே பகுதியில் டீ மாஸ்டராக வேலை செய்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டீ மாஸ்டராக வேலை செய்து வந்த வடமாநில இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.