குட்கா, சிகரெட்டுக்கு அடிமையானதை பெற்றோர் தட்டிக்கேட்டதால் - கோவையில் 13 வயது சிறுவன் தற்கொலை..!

கோவை சவுரிபாளையத்தில் குட்கா, புகைப்பழக்கத்திற்கு அடிமையான சிறுவனை பெற்றோர் தட்டி கேட்டதால் 13 வயது சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு.


கோவை: கோவை மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுவனின் தந்தை சவுரிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது கடை ஒன்றில் அச்சிறுவன் குட்கா, சிகரட்டை வாங்கி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் சிகரெட் மற்றும் குட்காவுக்கு அடிமையானதால் சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் தந்தை சிறுவனை கண்டித்து, புகை மற்றும் குட்கா பழக்கத்தை விடும்படி வலியுறுத்தி உள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த சிறுவன் வீட்டிற்கு சென்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் தந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குட்கா, சிகரெட் போன்ற புகையிலை பழக்கத்திற்கு அடிமையான சிறுவனை பெற்றோர் தட்டி கேட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...