குட்கா, சிகரெட்டுக்கு அடிமையானதை பெற்றோர் தட்டிக்கேட்டதால் - கோவையில் 13 வயது சிறுவன் தற்கொலை..!

கோவை சவுரிபாளையத்தில் குட்கா, புகைப்பழக்கத்திற்கு அடிமையான சிறுவனை பெற்றோர் தட்டி கேட்டதால் 13 வயது சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு.


கோவை: கோவை மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுவனின் தந்தை சவுரிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது கடை ஒன்றில் அச்சிறுவன் குட்கா, சிகரட்டை வாங்கி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் சிகரெட் மற்றும் குட்காவுக்கு அடிமையானதால் சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் தந்தை சிறுவனை கண்டித்து, புகை மற்றும் குட்கா பழக்கத்தை விடும்படி வலியுறுத்தி உள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த சிறுவன் வீட்டிற்கு சென்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் தந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குட்கா, சிகரெட் போன்ற புகையிலை பழக்கத்திற்கு அடிமையான சிறுவனை பெற்றோர் தட்டி கேட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...