திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தனக்கு மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு ஒதுக்கி தரவேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற மாற்றுதிறனாளியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி தரவேண்டும் என மனு அளித்த நிலையில் தாமதமானதால் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றத்திறனாளியான தனக்கு தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி தரவேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

ஆனால் மனு அளித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வீடு ஒதுக்கப்படவில்லை.



இந்நிலையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தனக்கு மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.



இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அவரிடம் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வாக்களித்து விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...