திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தனக்கு மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு ஒதுக்கி தரவேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற மாற்றுதிறனாளியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி தரவேண்டும் என மனு அளித்த நிலையில் தாமதமானதால் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றத்திறனாளியான தனக்கு தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி தரவேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

ஆனால் மனு அளித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வீடு ஒதுக்கப்படவில்லை.



இந்நிலையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தனக்கு மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் தமிழக அரசின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.



இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அவரிடம் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வாக்களித்து விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...